இந்திய போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 மாலுமிகள் காயம்: விசாரணைக்கு உத்தரவு..!!

Read Time:1 Minute, 39 Second

timthumb (1)இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். நிரீக்ஷக் போர்க்கப்பல், மும்பையில் இருந்து விசாகப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கடந்த 16-ந்தேதி கொச்சிக்கு வந்த போது, கடற்படையில் நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் ஏற்றும் பணி நடந்தது.

கப்பலின் மேல்தளத்தில் இந்த பணி நடைபெற்ற போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒரு வீரரின் வலது கால் துண்டானதுடன் படுகாயமும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 16-ந்தேதி நடந்துள்ள நிலையில் கடற்படை சார்பில் இதுவரை எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் வருகின்றது அரைநிர்வாண உணவகம்: உணவருந்த காத்திருக்கும் 5,000 பேர்…!!
Next post திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் நிலையத்தில் கதறிய 10–ம் வகுப்பு மாணவி…!!