விசாகப்பட்டினம்: பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து – பல கோடி சேதம்..!!
இங்குள்ள டுவ்வாடா தொழிற்பேட்டை பகுதியில் ‘பயோமேக்ஸ் ஃபியூல்ஸ்’ என்ற மரபுசாரா பெட்ரோலிய பொருட்களை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. 5 லட்சம் டன் டீசலை உற்பத்தி செய்யக்கூடிய இந்த ஆலையில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இங்கு உற்பத்தியாகும் பெட்ரோல் மற்றும் டீசலை சேமிக்க வைக்கப்பட்டுள்ள 8 டேங்கிகளில் பற்றிய தீ, மளமளவென ஆலை பகுதிக்கும் தாவியது. தீயின் வெப்பம் தாங்காமல் இவற்றில் ஆறு டேங்கிகள் வெடித்து சிதறின.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 45-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வேண்டுகோளை ஏற்று உதவிக்கு இந்திய கடற்படையை சேர்ந்த தீயணைப்பு ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்தால் ஏராளமான பொருளிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் யுவராஜ் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
Average Rating