7 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த மன்னர்! சுவாரசியமான காதல் கதை..!!

Read Time:4 Minute, 33 Second

timthumbபூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது.

இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது காதல் கதை சுவாரசியமானது.

பூட்டான் ராணி ஜெட்சன் உலகிலேயே இளம்வயது ராணி ஆவார், சற்றும் அரச குடும்பத்தினை பின்புலமாக கொண்டிராத இவர், பூட்டான் நாட்டின் ராணியானதற்கு காரணம் காதல் தான்.

ஜெட்சனின் தந்தை விமான ஓட்டுநர் ஆவார், தாயர் அவர்கள் பூட்டான் நாட்டின் பண்டைய கால குடும்ப பின்னணியை சேர்ந்தவர், இந்தியாவில் பள்ளிப்படிப்பை படித்த ஜேட்சனுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம்,

தனது பள்ளிப்பருவத்தில் கூடைப்பந்து விளையாட்டின் அணித்தலைவராக இருந்தார், இதுதவிர ஓவியம் வரைவது, பள்ளிகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது என் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.

பள்ளிப்பருவத்தில் பல்வேறு பரிசுப்பொருட்களை தட்டிச்சென்ற இவர் ஆங்கிலம், இந்தி மற்றும் பூட்டான் நாட்டின் தாய்மொழியான Dzongkha ஆகிய மொழிகளை சரளமாக பேசும் திறமை படைத்தவர்.

தனது பள்ளி படிப்பிற்கு பிறகு பிரித்தானியாவில் மனோதத்துவம் மற்றும் கலை தொடர்பான படிப்பினை படித்தார், ஆனால் இவர் தனது படிப்பினை பாதியிலேயே இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளானார், காரணம் இவரது திருமணம்.

அப்போது இவருக்கு வயது 21. இவரது திருமணம் பூட்டான் மன்னர் கேசருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை கேட்ட அந்நாட்டு மக்கள் தங்கள் புருவத்தினை ஒரு படி மேலே உயர்த்தினர்.

ஏனெனில் ஒரு நாட்டின் மன்னரை, சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் திருமணம் முடிக்கிறாரா? என்பதே மக்களின் கேள்வியாக இருந்தது.

ஜெட்சனிடம் மயங்கிய மன்னர்
அழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவரான ஜெட்சன் மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர், பள்ளிக்காலத்தில் அறிவில் சிறந்தவராக இருந்தபோதிலும், அதுகுறித்து எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளமாட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் பூட்டான் மன்னர் ஜெட்சனை சந்தித்துள்ளார், கேசர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார், அப்போது அவருக்கு வயது 17, ஜேட்சனுக்கு வயது 7.

ஜேட்சனின் அறிவிலும், அழகிலும் மயங்கிய கேசர், நான் இப்போது தனியாக இருக்கிறேன், நீயும் தனியாக இருக்கிறாய்.

நீ எனது மனைவியாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், எப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகிறாயோ, அப்போது நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அதன் படியே பள்ளிப்படிப்பை முடித்த ஜேட்சன், பிரித்தானியாவில் கல்லூரிப்படிப்பை தொடருகையில் மன்னருடனான தனது காதல் உறவை தொடர்ந்துள்ளார்.

திருமணம் நிச்சயம் செய்வதற்கு 3 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளனர், ஆனால் இவை அனைத்தும் உலகிற்கு வெளிவரவில்லை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரே இவர்களது காதல் கதை தெரியவந்துள்ளது,

2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு கடந்த ஆண்டுதான் குட்டி மன்னர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!!
Next post உறவினப் பெண்ணிடம் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் கைது..!!