சோமாலியாவில் மசூதி இடிந்து 15 பேர் பலி…!!
Read Time:1 Minute, 14 Second
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மசூதி செப்பனிடும் பணியில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் உள்ள ஒரு மசூதியை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தொழுகை நடந்தது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு போடப்பட்டிருந்த கான்கிரீட் திடீரென இடிந்து விழுந்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 15 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Average Rating