உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்ற கொடூரத் தாய் கைது..!!

Read Time:1 Minute, 50 Second

timthumb (2)பஞ்சாப் மாநிலத்தில் உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்று நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் அமிர்தசரசில் வசித்துவரும் அந்தப் பெண், தனது ஒன்றரை வயது குழந்தையை தங்களது உறவினர்களான ஹரிசிங், பில்லா ஆகியோர் உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டதாக நேற்றுமுன்தினம் போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது தனது உறவினர்களான ஹரிசிங்கையும், பில்லாவையும் பழையப்பகை தொடர்பாக பழிவாங்குவதற்காக பெற்ற மகனை தானேஎரித்துக் கொன்றுவிட்டு அந்தப் பெண் நாடகமாடுவது தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், குழந்தையின்மீது மண் எண்ணெயை ஊற்றி தீமூட்டிய பின்னர், தானும் தீமூட்டி தற்கொலை செய்துகொள்ளவே அந்தப்பெண் முதலில் திட்டமிட்டுள்ளார். ஆனால், தீயில் எரியும் குழந்தை துடிதுடித்து கதறுவதைப் பார்த்து, தீக்குளிக்க தைரியமில்லாமல் தனது தற்கொலை முயற்சியை அவர் கைவிட்டார் என தெரியவந்தது.

அவர்மீது கொலைவழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலம்பியா மற்றும் பெருவிலிருந்து மீட்கப்பட்ட சிங்கங்கள்..!!
Next post மகாகெட்டிக்காரன்’: புலிகளின் மட்டு. மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் பிரபா கைது..!!