மல்லாகத்தில் தீ விபத்து: வீடு எரிந்து நாசம்…!!
Read Time:1 Minute, 23 Second
மல்லாகம் வைரவர் கோவில் வீதியில் வீடுகள் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
மேற்படி தீ விபத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த ரத்தினம் அனுராஜா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்தது.
வீட்டில் உள்ள யாவரும் வீட்டினைப் பூட்டிவிட்டு சுற்றுலாவுக்கு சென்ற சமயம் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், வீட்டின் உள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள். 2 துவிச்சக்கர வண்டிகள் என்பன முற்றாக எரிதுள்ளதுடன், வீட்டில் உள்ள பெரும்பாலான பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பினரால் விரைவான செயற்ப்பாட்டினால் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating