பற்றி எரிந்த கட்டடத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசி காப்பாற்றிய தாய்..!!
தென் கொரியாவில் பற்றி எரியும் கட்டடத்திலிருந்து குழந்தைகளை தாய் ஒருவர் வீசி எறிவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென் கொரியாவின் பியாங் டீக் (Pyeongtaek) என்ற நகரத்தில் தாய் ஒருவர், தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பற்றவே மளமளவென பரவத் தொடங்கியுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த தாய், ஜன்னலின் வழியே காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
உடனடியாக கீழே இருந்த நபர்களின் அறிவுறுத்தலின் பேரில், தனது மூன்று குழந்தைகளையும் ஜன்னலின் வழியாக வீசி எறிந்துள்ளார். அதுமட்டுமின்றி தானும் கீழே குதித்துள்ளார், எனினும் அதிர்ஷ்டவசமாக தனக்கும், குழந்தைகளுக்கும் எவ்வித படுகாயங்களுமின்றி தப்பியுள்ளனர்.
இதனை வீடியோவாக எடுத்த பொறியாளர் பில் போர்ட் (Bill Frost) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Average Rating