ரயில் நிலையத்தில் பயணிகளை சரமாரியாக தாக்கிய நபர்: ஒருவர் பலி….மூவர் படுகாயம்…!!
ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அங்குள்ள பயணிகளை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பவேரியாவில் உள்ள முனிச் நகர் ரயில் நிலையத்தில் தான் சற்று முன்னர் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
முனிச்சில் உள்ள Grafing S-Bahnhof என்ற ரயில் நிலையத்தில் சற்று முன்னர் வாலிபர் ஒருவர் ‘அல்லாஹு அக்பர்’ என உரக்க கத்திக்கொண்டு நுழைந்துள்ளார்.
அப்போது, அங்குள்ள பயணிகளை தான் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை கடுமையான போராட்டத்திற்கு பின்னர் கைது செய்துள்ளனர்.
நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இது தீவிரவாத தாக்குதலா என உறுதிப்படுத்தாத நிலையில், நபரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating