வெற்றியுடன் நிறைவடைந்த போராட்டம்…!!

Read Time:1 Minute, 59 Second

1155183081Untitled-1போகலை காரீய சுரங்கத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக இணக்கம் காணப்பட்ட நிலையில், குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, இது குறித்து அச் சங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஜனவரி முதல் நிலுவையிலுள்ள சம்பளத்துடன் 5000 ரூபாய் அதிகரித்து சம்பளத்தை வழங்குதல்.

* 21 மருத்துவ விடுமுறைகளை வழங்குதல்

* 9 மணித்தியாலங்களுக்கு பதிலாக 8 மணித்தியாலங்களை பணி நேரமாக வழங்குதல்.

* சீருடை வழங்குதல்

* ஊழியர்கள் ஓய்வு பெறும் போது பரிசில்களை வழங்குதல்.

* வருடாந்த சுற்றுலா, உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இவ்வாறு வென்றெடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழில் திணைக்கள ஆணையாளர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நிர்வாகிகளால் ஊழியர்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தர இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை (12) அணைத்து ஊழியர்களும் கடமைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோசித்தவிடம் இன்றும் விசாரணை…!!
Next post இப்படி ஒரு இயந்திரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?