மலேசிய விமான விபத்தில் 3 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்தது..!!

Read Time:1 Minute, 54 Second

timthumbகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் பறந்த போது போராட்டக்காரர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 375க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

அவர்களில் ஆஸ்திரேலியாவின் பொத்நகரை சேர்ந்த அந்தோணி மஸ்லின் – மரிட் நோரிஸ் தம்பதியின் 3 குழந்தைகளும் அடங்குவர். அவர்களது பெயர்கள் மோ (12), இவி (10), மற்றும் ஒடிஸ் (8) ஆகும். இவர்கள் தங்களது தாத்தாவுடன் பயணம் செய்த போது இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகினர்.

விமான விபத்தில் பெற்று ஆசையுடன் வளர்த்த தங்களது 3 குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு அந்தோணி மஸ்லின் மரிட் நோரிஸ் தம்பதி தவியாய் தவித்தனர்.

இதற்கிடையே விமான விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. அக்குழந்தைக்கு வயலட் மே மஸ்லின் என பெயரிட்டுள்ளது. இக்குழந்தை தங்களுக்கு விபத்தில் பலியான குழந்தைகள் இவி, மோ, ஒடிஸ் அனுப்பி வைத்த பரிசு என தம்பதி மகிழ்ந்தனர்.

குழந்தை வயலட் தங்கள் வாழ்வில் இருளை அகற்றி அன்பு, ஒளி, நம்பிக்கை மற்றும் இன்பத்தை வாரி வழங்கியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை குத்தி கொன்ற கணவன்..!!
Next post சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!