மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு…!!

Read Time:1 Minute, 44 Second

201605151122503252_saudi-court-gives-20-lashes-to-man-for-beating-wife_SECVPFசவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு சவுதியில் உள்ள அல் கதீப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த மாதம் தனது கணவர்மீது இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரமாக மருத்துவமனை சான்றிதழையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், விசாரணையின்போது தனது கணவனுடன் சமரசம் செய்துகொண்டதாகவும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அந்த இளம்பெண் கோர்ட்டில் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரங்களில் சமரசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துவிட்ட நீதிபதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்நபருக்கு 20 சவுக்கடிகளை கொடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்த சவுக்கடியின்போது, விரும்பினால் அவரது மனைவியும் அங்கு இருக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -2)
Next post உத்தர பிரதேசத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்…!!