வாரியாபொல இளைஞரை கடத்திய இருவரும் விளக்கமறியலில்…!!
Read Time:1 Minute, 17 Second
இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவதற்காக வாரியாபொல இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாரியாபொல நீதவான் நீதிமன்றில் அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக வாரியாபொல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நான்கு சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் நான்கு பேரும் வீடுகளிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating