சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி…!!

Read Time:1 Minute, 23 Second

201605211503069484_8-killed-as-China-issues-blue-alert-for-heavy-rains_SECVPFசீனாவின் தெற்கு மாகாணங்களில் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக, குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 100 முதல் 130 சென்டிமீட்டர் அளவிலான மழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக மேற்கண்ட மாகாணங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் வாழும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புகுள்ளாகினர்.

குவாங்டாங், ஹைனான், பியூஜியான், யுன்னான் உள்ளிட்ட மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உச்சகட்ட அபாய நிலைக்கு அடுத்த நிலையான நீலநிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள க்சின்யி நகரில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி எட்டுபேர் உயிரிழந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையா? தீர்வுகள் உங்கள் கைவசமே உள்ளது..!!
Next post புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மாமருந்தாகும்: பான் கி மூன்…!!