உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் 04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு..!!
முதியவர் உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த ஹட்டன் பொலிஸாரினால் முதியவர் மீட்கப்பட்டுள்ளார்.
70வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் மஸ்கெலியா, லக்கம் தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மயானத்தின் ஊடாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும் தொடரும் சீரற்ற காலநிலையிலும், மயானத்திலே இவர் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதியவரை பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
குறித்த முதியவரின் நிலையை கவனத்திற்கொண்ட நீதவான், அவரை நோட்டன் சந்திரா முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டுள்ளார்.
மேலும் மீட்க்கப்பட்ட வயோதிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது
Average Rating