லொறியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி..!!
Read Time:1 Minute, 29 Second
கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பால் விநியோகிக்கும் லொறியொன்றும், எதிர் திசையில் வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த காரின் சாரதியும், பெண் ஒருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காரில் பயணித்த மற்றுமொரு பெண்ணும், குழந்தையும் காயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பால் விநியோகிக்கும் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating