அனர்த்தம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம்…!!
Read Time:58 Second
வெள்ளப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 14ம் விதியின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.
நாளை பிற்பகல் ஒரு மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தின் போது வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating