குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மைத் தன்மை நீக்கம்: அதிரடி சட்டம்…!!
Read Time:1 Minute, 10 Second
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய அதிபர் Joko “Jokowi” Widodo இந்த தண்டனைகள் தொடர்பான சட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
மேற்கு இந்தோனேசியாவில் கடந்த மாதம், பதின்ம வயது சிறுமி ஒருவர் 14 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம், குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating