தென் கொரியா செல்கிறார் பிரதமர்…!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தென் கொரியா புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இடம்பெற உள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு செல்ல உள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் உயரிய அபிவிருத்தி மற்றும் கலாசார ரீதியில் வரலாற்று ரீதியாக இணைந்த கொரியாவின் தற்போதைய அபிவிருத்தி என்பது மாநாட்டின் கருப் பொருளாகும்.
எதிர்வரும் 29ம்திகதி முதல் ஜூன் மாதம் 01ம் திகதி வரை தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற உள்ள மாநாட்டில் மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
160 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட றோட்டரி கழக பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட உரையாற்றவுள்ளதாகவும் பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating