சவுதியில் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது பொறாமை கொண்ட கணவர்: நடந்த விபரீதம்..!!

Read Time:2 Minute, 43 Second

timthumb (1)சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை அப்பெண்ணின் கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள King Fahad MedicalCity – யில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான Muhannad Al Zabn என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

பிரசவத்தின் போது இப்பெண்ணின்க ணவரும் உடனிருந்துள்ளார், அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உட ல்பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார்.

குழந்தை பிறந்து 2 வருடங்கள் கடந்து விட்டபோதிலும், இவரது மனதுக்குள் பொறாமை வேரூன்றியுள்ளது, என்னுடைய மனைவியை எவ்வாறு அப்படி தொடலாம் எனமனதுக்குள் சிந்தித்துக்கொண்டே இருந்துள்ளார்.

இதன் முடிவாக, தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், எனவே உங்களை எப்போது சந்திக்கலாம் என மருத்துவரிடம் அனுமதி கோரியுள்ளார்.

மருத்துவமனைக்கு கீழ் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார், இதன்படியே மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்த அந்நபர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது, அதன்பின்னர் அந்நபரை தேடிப்பிடித்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரவசத்தின் போது மருத்துவர் மீது எனக்கு “பொறாமை” ஏற்பட்டது.

அதனால் தான் இவ்வாறு செய்துவிட்டேன் என கூறியுள்ளார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு கடித்ததால் கோமா நிலை மூளைச்சாவு அடைந்த குழந்தை உயிர் பிழைத்தது…!!
Next post முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்–மகன் மீது தாக்குதல்: பெண் உள்பட 2 பேர் கைது..!!