லொறியின் கீழ் நசுங்கி பெண் பலி..!!
Read Time:1 Minute, 9 Second
தெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண், பலியாகியுள்ளார்.
லொறியின் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் இருந்து விலகி, வீதி ஓரத்தில் இருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ் தரிப்பிடத்தில் நின்ற பெண், லொறியின் கீழ் நசுங்கி, படுகாயமடைந்த நிலையில் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் (43 வயது) தலுவத்தமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் மேலும் கூறினர்
Average Rating