சீனாவில் மனைவியை தாக்கி காருக்குள் திணித்த கணவர்..!!
சீனாவில் மனைவியை கொடூரமாக தாக்கி காருக்குள் திணிக்கும் கணவரின் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.
சீனாவில் குயாங்குயா நகரைச் சேர்ந்த கணவன் – மனைவி காரில் வெளியே வந்தனர். இவர்கள் அங்குள்ள கியாஸ் நிரப்பும் நிலையத்தில் தங்கள் காரை நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் –மனைவியை மிக கொடூரமாக அடித்து உதைத்தார்.
வேதனை தாங்காமல் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மனைவியை அவர் விடவில்லை. அடித்து உதைத்தார். காரின் பின்புறம் பொருட்கள் அடைத்து வைக்கும் இடத்தில் மனைவியை திணித்தார். அங்கும் அவருடன் மனைவியால் போராட முடியவில்லை.
இறுதியில் அவரை காருக்குள் தள்ளி அதிவேகமாக கதவை சாத்தினார். அதில் அப்பெண்களின் கை மாட்டி காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த நபர் காரை சர்ரென… ஓட்டிச் சென்றார்.
இக்காட்சிகள் அனைத்தும் ரோட்டில் சென்ற பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. மேலும் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவாகி இருந்தன. அது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Average Rating