மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான கணவன்..!!
Read Time:1 Minute, 1 Second
திருகோணமலை பிரதேசத்தில் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த கணவனை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெர்ணாண்டோ இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த நிலையிலேயே நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating