மட்டையால் தாக்கி படுகொலை! குற்றவாளிக்கு மரண தண்டனை..!!
Read Time:1 Minute, 14 Second
தென்னம் மட்டையால் தாக்கி ஒருவரை கொலை செய்த நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கல்னேவ சியம்பலாகஸ்வெவ – மீஹொந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 2013ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இன்று கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சுப்போகம – கட்டுகெலிய பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3.83 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating