பித்தப்பை-கல்லீரல் கோளாறு: 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் வழக்கு…!!

Read Time:3 Minute, 19 Second

201606241214120095_8-month-old-child-and-the-parent-to-euthanasia-case-in-court_SECVPFஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பத்தவாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமணப்பா பெங்களூரில் உள்ள சூப்பர்மார்க் கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஞானசாயி என்ற 8 மாத குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு பிறக்கும் போதே பித்தப்பை மற்றும் கல்லீரல் கோளாறு இருந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குழந்தையை பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் குழந்தையை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக கொண்டு சென்ற போது ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆபரே‌ஷன் பலன் அளிக்க வில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.

இதையடுத்து குழந்தையை வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது குழந்தைக்கு கல்லீரல் மாற்ற வேண்டும். இதற்கு ரூ.18 லட்சம் செலவாகும்.

மேலும் பித்தப்பை கோளாறு தொடர்பாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 4 மாதங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்தால்தான் குழந்தை உயிர் பிழைக்கும். அதுவரை மருந்து மாத்திரைகளுக்காக தினமும் ரூ.50 ஆயிரம் செலவாகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி ரமணப்பா ஆந்திர மாநிலம் சம்பள்ள பள்ளி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது குழந்தைக்கு 4 மாதங்களுக்குள் கல்லீரல் மாற்று ஆபரே‌ஷன் செய்தால் தான் பிழைக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு என்னிடம் பணவசதி இல்லை. மேலும் குழந்தை உயிரோடு இருக்கும் 4 மாதமும் தினமும் மருந்து மாத்திரைகளுக்காக ரூ.50 ஆயிரம் செலவாகும் என்று டாக்டர்கள் கூறினார்கள். அதற்கும் என்னிடம் வசதி இல்லை. எனவே குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதி வாசுதேவ் விசாரித்தார். அவர் குழந்தையை கருணை கொலை செய்வதற்கு அனுமதி மறுத்தார். இதுபோன்ற வழக்கில் ஐகோர்ட்டை தான் அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

இதையடுத்து ரமணப்பா மதன பள்ளி கோர்ட்டை அணுகிய போதும் அங்குள்ள நீதிபதியும் கருணை கொலைக்கு அனுமதி மறுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளஹஸ்தி அருகே இளம்பெண்ணை அடித்து கொன்று செயின் பறிப்பு…!!
Next post பீகாரில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை இழுத்து சென்று கொடூரமாக கற்பழித்த கும்பல்: ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்…!!