அமெரிக்காவில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 5 பேர் பலி…!!
Read Time:58 Second
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு செல்லும் இருப்புப்பாதை வழியாக கொலாராடோ மாநிலத்தின் அம்டிரக் நகரின் அருகே (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை 9.45 மணியளவில் ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
டிரினிடாட் என்ற இடத்தை நெருங்கியபோது வேகமாக வந்த ரெயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு வேனின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். காயமடைந்த சிலர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் டென்வர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Average Rating