விளையாட்டு விபரீதமானது: தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்…!!
அமெரிக்காவில் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் இடியானா ஸ்புருல் (22), இவருக்கு 6 வயது மற்றும் 4 வயதில் 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று அண்ணன் தம்பி இருவரும் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது தாயாரின் குண்டு நிரப்பிய துப்பாக்கியை வைத்து இருந்தனர். துப்பாக்கியை வைத்து விளையாடுவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. அப்போது 6 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டான்.
இதனால் துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டு 4 வயது சிறுவனின் உடலுக்குள் பாய்ந்தது. எனவே ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவனை நிவார்க் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அது குறித்து போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். சிறுவனின் தாயார் இடியானா கைது செய்யப்பட்டார். குழந்தையின் நலனுக்கு எதிராக செயல் பட்டதாகவும், ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் டெட்ராய்டில் 5 வயது சிறுமி பாட்டியின் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு மரணத்தை தழுவினாள்.
Average Rating