அண்ணியின் வாயை வெட்ட சதித்திட்டம் தீட்டிய தம்பி கைது…!!
Read Time:1 Minute, 24 Second
சகோதரனின் (அண்ணன்) மனைவியை பின் தொடர்ந்து வாயை வெட்டி விட்டு அவரது பின் பகுதியை கத்தியால் குத்துமாறு கூறி, ஒப்பந்த குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபாவை கொடுத்த தம்பியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவருடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குற்றத்தை செய்ய முயற்சித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கண்டி, பிலிமதலாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சம்பவத்திற்கு குடும்பத் தகராறு காரணம் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முதலில் பெண்ணை கொலை செய்யுமாறு சந்தேகநபர் ஒப்பந்தக்காரரிடம் கூறியுள்ளார். அவர் அதற்கு மறுக்கவே பெண்ணின் வாயை கிழித்து, அவரது பின்புறத்தில் கத்தியால் குத்துமாறு கூறி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் என மேலும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Average Rating