திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் பரிதாப நிலை…!!
களுத்துறை நகரில் பிரபலமான நகைக் கடை ஒன்றில் பணிபுரிந்த 18 வயதான இளைஞர் தான் தொழில் செய்த கடையிலேயே 6 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த நகைகளை திருடிய இளைஞன் அதனை விற்ற பணத்துடன் தனது நண்பர்கள் 22 பேருடன் சுற்றுலா சென்றிந்ததாகவும் களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் களுத்துறையில் திருடிய நகைகளை புறக்கோட்டை செட்டியார் தெருவில் விற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த இளைஞரின் நடவடிக்கைகளுக்கு உதவிபுரிந்ததாகக் கூறப்படும் இளைஞரின் உறவினர் ஒருவரையும் களுத்துறை தெற்கு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபரான குறித்த இளைஞரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மோட்டார் வண்டியொன்றை வாங்கும் ஆசையிலேயே திருட்டில் ஈடுபட்டதாகவும், பின்னர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை அடகு வைத்து குறித்த சுற்றுப்பயணத்தை இளைஞர் குழு மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட போது குறித்த இளைஞரிடம் 40,000 ரூபாய்கள் இருந்ததாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தலைமை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Average Rating