பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி!

Read Time:2 Minute, 9 Second

24-14614837பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ’செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை அம்மாநில பெண்கள் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் சோம்யா குர்ஜார் ஆகியோர் பார்வையிட சென்றனர்.

அப்போது, ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது.

மகளிர் ஆணைய தலைவர் சுமர் ஷர்மாவும் இந்த செல்பி புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். ஆனால் செல்பி எடுத்ததை கவனிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணைய உறுப்பினருக்கு ஆணைய தலைவர் சுமன் ஷர்மா உத்தரவிட்டார்.

இப்பிரச்சனை பெரும் சர்ச்சையாகிய நிலையில் தேசிய பெண்கள் ஆணையம் தலையிட்டது.

ராஜஸ்தான் பெண்கள் ஆணையத்திற்கு நோட்டீஸ் விடுத்த தேசிய பெண்கள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் செல்பி எடுத்த தலைவர் மற்றும் உறுப்பினருக்கு சம்மன் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து ’செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோர்களும் வீதியில் ஆர்ப்பாட்டம்
Next post கபாலி இலவச டிக்கெட் வேண்டுமா?