வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி கைது..!!
தமிழகத்தில் வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அகதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த முகாமில் வசிக்கு ஸ்டீபன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மனைவி திருமங்கலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பார்க்க ஸ்டீபன் நேற்று வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் வைத்தும் தகராற்றில் ஈடுபட்டு மனைவியை தாக்கியுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலை ஊழியர்களை அவர் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating