யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது நிதி கையாடல் குற்றச்சாட்டு…!!
Read Time:1 Minute, 9 Second
யாழ். பிரபல பாடசாலையின் இரசாயனவியல் பாட ஆசிரியர் மாணவர்களிடம் பெற்றநிதியை கையாடி உள்ளார் என்று பாடசாலை சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மையில் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக மாணவர்களிடம் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியை இவரே கையாண்டு உள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 01 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டு இருந்த நிலையில் சுமார் 50 ரூபாய்மாத்திரம் மிஞ்சி இருப்பதாக இவரால் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இது பொய்யான கணக்கு என்று சுற்றுலாவில் பங்கேற்று இருந்த சக ஆசிரியர்கள் கூறிய நிலையில் கல்வி திணைக்களத்தால் இவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating