பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம்: அரசு பஸ் கண்டக்டரின் கழுத்தை அறுத்த மாற்றுத்திறனாளி…!!
ஆந்திர மாநிலம் புத்தூரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு தமிழக அரசு பஸ் வந்தது.
திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) கண்டக்டராக இருந்தார்.
பிச்சாட்டூர் பகுதியில் அதே ஊரை சேர்ந்த மாற்றுத் திறனாளி தாமோதரன் பஸ்சில் ஏறினார். இவரது மனைவி ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே பஸ் வந்ததும் தாமோதரன் வண்டியை நிறுத்த சொன்னார். அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்சை நிறுத்த முடியாது என்று கண்டக்டர் செல்வம் கூறிவிட்டார். அதற்குள் பஸ் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வந்தடைந்தது. பஸ்சில் இருந்து இறங்கிய தாமோதரன் அருகே உள்ள காய்கறி கடையில் கத்தியை எடுத்து வந்தார்.
பின்னர் பஸ் நிலையத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த கண்டக்டர் செல்வத்தின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி தாமோதரனை கைது செய்தார்.
Average Rating