தூக்கக் கலக்கத்தால் பொலிஸ் அத்தியட்சகருக்கு வந்த வினை…!!
கெப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் பளுகஸ்சேகம பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ. கே. ரத்நாயக்க மற்றும் அபில ருவான் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரும் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கெப் வண்டி வீதியை விட்டு விலகி வேம்பு மரம் ஒன்றில் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் வண்டியை ஓட்டிச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்து காரணம் என கூறப்படுகிறது. எவ்வாறாயினும் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating