சிவகாசி வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை…!!

Read Time:1 Minute, 41 Second

201607121448450868_Sivakasi-explosion-killed-toll-rises-to-4_SECVPFசிவகாசியில் உள்ள விருதுநகர் ரோடு, பாரதி நகரில் ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் கடந்த 2-ந்தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் உருக்குலைந்தது.

வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்கள் தீயில் கருகின. வெடிவிபத்தில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அப்பாவிகளும் சிக்கினர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சிவகாசியை சேர்ந்த தங்கவேல் (வயது50), ராமேசுவரத்தை சேர்ந்த முத்தையா (53), சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ஆல்வின் ஏவல் சிவிங்கர் (37) ஆகியோர் உடல் கருகி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஆத்தியப்பன் (48) சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் பரிதாபமாக இறந்தார். தீக்காயம் அடைந்த அவருடைய 2 மகன்கள் பார்த்திபன் (14), வினோத்குமார் மற்றும் பாரதிநகரை சேர்ந்த பாண்டித்துரை ஆகியோர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்தியப்பன் இறந்ததையொட்டி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பின் வாயில் சிக்கிய பிள்ளையை காப்பாற்றிய வீர எலி: வீடியோ…!!
Next post தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?