ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தை…!!
மும்பையில் ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ளது பாலாப்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜிகுத்தே. இவருடைய மகள் பாரதி (வயது 6). அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தாள்.
ராஜிகுத்தே தனது மகளிடம் ஒன்று, இரண்டு எண்களை 13 வரை சொல்லும்படி கேட்டார். ஆனால் பாரதியால் சரியாக சொல்ல முடியவில்லை. இதில் கோபம் அடைந்த ராஜிகுத்தே வெங்காயத்தை எடுத்து பாரதி வாய்க்குள் திணித்தார்.
இதில் வெங்காயம் தொண்டைக்குள் சென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பாரதி இறந்துவிட்டாள். ஆனால் பாரதி இயற்கையாக இறந்து விட்டதாக ராஜிகுத்தே மற்றவர்களிடம் கூறினார். இதையடுத்து பாரதிக்கு இறுதி சடங்கு நடத்தி பிணத்தை புதைத்தனர்.
ஆனால் இந்த சம்பவம் பற்றி அவரது மனைவி போலீசுக்கு சென்று புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து ராஜிகுத்தேவை போலீசார் கைது செய்தனர்.
Average Rating