ஊழல் மோசடிகளுக்கு அரசாங்கமே பாதுகாப்பு ; கபே அமைப்பு குற்றச்சாட்டு…!!
Read Time:1 Minute, 17 Second
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கி வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடும் வரையில் சமூகத்தில் அரசாங்கத்திற்கு நல்ல பெயர் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்ந்தும் கடந்த காலங்களைப் போன்றே தற்போதும் நடைபெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி நிறைந்த ஆட்சி முறைமையை நாட்டுக்கு அறிமுகம் செய்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
Average Rating