பாடசாலைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை…!!
காலி, பிங்கந்த பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பிரதசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி, ஜூன் முதலாம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தனது மகள் காணாமல் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கத்தியொன்றை காட்டி இளைஞர் ஒருவர், அவரை அச்சுறுத்தியுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸாரிடம் காணாமல் போயுள்ள மாணவியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் மகள் காணாமல் போய் 46 நாட்கள் ஆகியும் இதுவரை பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஹிக்கடுவ பொலிஸாரிடம வினவிய போது, இது தொடர்பாக விஷேட விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating