அரசாங்கம் பாரியளவில் மாணவர் அடக்குமுறையில் ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு..!!

Read Time:1 Minute, 37 Second

jvp-logoமாணவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்குவதை விடுத்து, அவர்கள் மீது பாரியளவில் அடக்குமுறையில் ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுலள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்கள் பலருக்கு வகுப்புத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயர் கல்வி அமைச்சர் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவர் உயர் கல்வி அமைச்சுக்கு பதிலாக சிறைச்சாலைகள் அமைச்சராக செயற்படுகின்றாரா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு ; சீ.சி.டி.வி காணொளி…!!
Next post பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்…!!