பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்…!!
Read Time:58 Second
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக தங்கம் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இருவரை நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யும் போது குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. நீண்டகால விசாரணைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்த இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating