உ.பி.யில் விஷச்சாராயத்துக்கு 17 பேர் பலி: பலர் கவலைக்கிடம்…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் ஆஸ்பத்திரிகளில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குள்ள எட்டா மாவட்டத்துக்குட்பட்ட அலிகஞ்ச் பகுதியில் அதிகபோதைக்காக விஷத்தன்மை கொண்ட சில பொருட்களை கலந்து தயாரித்து விற்கப்பட்ட சாராயத்தை நேற்றுமாலை வாங்கி குடித்தவர்களில் உள்ளூர் போலீசார், மாவட்ட கலால் கண்காணிப்பு படையினர் உள்பட 14 பேர் நேற்று உயிரிழந்தனர்.
ஆறுபேர் கண் பார்வை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படனர். மேலும் பலர் வேறுசில பிரச்சனைகளால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் மூன்றுபேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பான தகவல் அறிந்ததும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேசம் மாநில அரசு, மாவட்டத்துக்குட்பட்ட கலால்துறை அதிகாரிகளை அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.
Average Rating