சட்டவிரோத விளையாட்டில் ஈடுபட்ட அறுவர் கைது…!!
Read Time:1 Minute, 22 Second
திருகோணமலை, ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சட்டவிரோத விளையாட்டில் (சூது) ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அறுவரை, நேற்று (17) மாலை கைது செய்துள்ளதாக சூரியபுரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் சூரியபுரப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சிலர் சட்டவிரோத விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போதே இவர்கள் ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating