மனைவி மதுபோதையிலிருந்த போது மகள் பாலியல் துஷ்பிரயோகம்; தலைமறைவான தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…!!
மதுபோதையில் தாய் இருந்த போது பதினொரு வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம் கரவிட்டாகார பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியவராவார்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.
சம்பவ தினம் பாதிக்கப்பட்ட சிறுமியின் இரு சகோதரர்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்ததோடு, தாய் மதுபானம் அருந்திவிட்டு அதிக மதுபோதையில் இருந்திருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வீட்டுக்கு வந்துள்ள தந்தையான சந்தேக நபர் தனது மகளை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயத்தை அறிந்து கொண்ட நபர் ஒருவர், இது குறித்து சிலாபம் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
இத்தகவலைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating