மனைவி மதுபோதையிலிருந்த போது மகள் பாலியல் துஷ்பிரயோகம்; தலைமறைவான தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…!!

Read Time:2 Minute, 32 Second

180152803625மது­போ­தையில் தாய் இருந்த போது பதி­னொரு வய­து­டைய தனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் தந்தை ஒரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருப்­ப­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சிலாபம் கர­விட்­டா­கார பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரே இவ்­வாறு தனது மகளை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­வ­ராவார்.

வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சிறு­மியின் பெற்றோர் அப்­பி­ர­தே­சத்தில் அமைந்­துள்ள தும்புத் தொழிற்­சாலை ஒன்றில் பணி­யாற்றி வந்­துள்­ளனர்.

சம்­பவ தினம் பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் இரு சகோ­த­ரர்கள் வீட்­டுக்குத் தேவை­யான பொருட்­களை வாங்­கு­வ­தற்­காக கடைக்குச் சென்­றி­ருந்­த­தோடு, தாய் மது­பானம் அருந்­தி­விட்டு அதிக மது­போ­தையில் இருந்­தி­ருந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில், வீட்­டுக்கு வந்­துள்ள தந்­தை­யான சந்­தேக நபர் தனது மகளை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தி விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளமை மேற்­கொள்­ளப்­பட்ட ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வி­ட­யத்தை அறிந்து கொண்ட நபர் ஒருவர், இது குறித்து சிலாபம் பொலி­ஸா­ருக்கு தொலை­பேசி மூலம் தகவல் வழங்­கி­யுள்ளார்.

இத்­த­க­வலைத் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட சிலாபம் பொலிஸார் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது…!!
Next post வெறுப்பால் உங்கள் இதயம் பாதிக்காமல் பார்த்துக்கொளுங்கள்: கொல்லப்படுவதற்கு முன் போலீஸ்காரரின் உணர்ச்சிகர பதிவு…!!