வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது…!!
வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேற்படி இயக்கத்தில் பெண்களும் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒரு பெண் தீவிரவாதியை கைது செய்த போலீசாருக்கு மேலும் சில பெண் தீவிரவாதிகளின் முகவரி கிடைத்தது. இந்நிலையில், சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் நான்கு பெண் தீவிரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating