வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது…!!

Read Time:1 Minute, 26 Second

201607241508581130_4-women-militants-arrested-in-Bangladesh_SECVPFவங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேற்படி இயக்கத்தில் பெண்களும் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஒரு பெண் தீவிரவாதியை கைது செய்த போலீசாருக்கு மேலும் சில பெண் தீவிரவாதிகளின் முகவரி கிடைத்தது. இந்நிலையில், சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் நான்கு பெண் தீவிரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடு மேய்த்த பெண்ணை கொன்ற காட்டுயானை… 20 மணி நேரத்திற்குப் பின் போராடி உடல் மீட்பு- வீடியோ
Next post நோய்களுக்கு ஜீன் மட்டுமா காரணம்?