கொலை அச்சுறுத்தல் விடுத்து, பல தடவைகள் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!!
தனது மகளை பல தடவைகள்&பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய தந்தை ஒருவருக்கு 20 வருடங்கள் கடுமையான சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.ஹம்பாந்தோட்ட – சமோதகம பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மகள் விகாரைக்கு செல்ல தயாரான நிலையில் இருந்த போது, சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகள் மீது பல தடவைகள், பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியதாக, மகள் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைத்தண்டனை தவிர்ந்த, 2 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையையும் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இழப்பீட்டுத் தொகையை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating