309 பயணிகளுடன் சென்ற விமானத்தில் நடுவானில் கரும்புகை : மும்பையில் அவசரமாக தரையிறக்கம்..!!
Read Time:1 Minute, 20 Second
துபாயில் இருந்து மாலத்தீவின் மாலி நகருக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 309 பயணிகளும், விமான ஊழியர்களும் சென்றனர்.
இந்நிலையில் மும்பை வான்பகுதியில் சென்ற போது விமானத்தில் இருந்து கரும்புகை வெளியானது. இதனை கவனித்த விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கு அனுமதிக்குமாறு கேட்டார்.
மும்பை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளித்தனர். இதனையடுத்து 9-வது ஓடுபாதையில் பத்திரமாக விமானி தரையிறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். கரும்புகை ஏற்பட்டதால் விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Average Rating