உடன்பிறந்த சகோதரியை துஷ்பிரயோகம் செய்த இரு சகோதரர்கள் கைது..!!
உடன்பிறந்த சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சகோதரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே தாய்வயிற்றில் பிறந்த சகோதரியை இரண்டு சகோதரர்களும், கடந்த 2013 மற்றும் 2014 வருடங்களில் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வைத்திய பரிசோதனையின் பின் குறித்த சகோதரியினை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பெற்றோர் கூலித் தொழிற்கு சென்ற பின் குறித்த சகோதரியை இரண்டு சகோதரர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating