செத்த வீட்டு விடயத்திலும், வாசகர்களை குழப்பும்.. “லங்கா ஸ்ரீ” இணைய குழுமம்..!

Read Time:3 Minute, 13 Second

002ob
செத்த வீட்டு விடயத்திலும், வாசகர்களை குழப்பும்.. “லங்கா ஸ்ரீ” இணைய குழுமம்..!

அண்மையில் பிரான்சில், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரம் (வயது – 46) என்பவரே உயிரிழந்தவராவார். (இவர் புங்குடுதீவு முதலாம் வடடாரத்தை சேர்ந்த அமரர்.இராமலிங்கம், புங்குடுதீவு இரண்டாம் வடடாரத்தை சேர்ந்த திருமதி. மல்லிகா ஆகியோரின் மகன் ஆவார்.) இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னர், பிரான்சில் இறந்தமை காரணமாக இவர், மனம் குழம்பிய நிலையில், தனது வாழ்க்கையை தனிமையில் (கூடுதலாக பூங்காவிலேயே) கழித்து வந்துள்ளார்.

இவரின்தனிமை வாழ்க்கை, கவனிப்பாரற்ற நிலை காரணமாக அவரின் வாழ்க்கை சீரழிந்து போய் உள்ளது. 18.072016 அன்று இவர் மயங்கிய நிலையில் பாரிஸ் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து மீட்க்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25.07.2016 அன்று மரணமாகி இருந்தார்.

இவரது மரண சடங்கு, ஈமக்கிரியைகளை “பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள்” இணைந்து நாளை 29.07.2016 நடாத்த இருந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் மேற்படி செய்தியைத் திரிவுபடுத்தி, சில ஊடகங்கள் பிரான்ஸ் பாரிசில் இருந்து சுமார் 800 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள நைஸ் எனுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்து இவர் இறந்ததாக (“பிரான்ஸ் ஐ.எஸ் தாக்குதலில், இலங்கைத் தமிழரும் பலி” என்று) பொய்யாக தமது ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்து உள்ளார்கள்.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த மரணச்சடங்கு “மேற்படி திரிவுபடுத்தப்படட செய்திகள்” வெளிவந்த காரணத்தினால், இலங்கை தூதுவராலயம், பிரான்ஸ் பொலிஸாரின் மேலதிக விசாரணைக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்பதே பிந்திய செய்தி.

இதுவரை காலமும் செத்த வீட்டு விளம்பரத்தின் மூலம், தமது வயிற்றை நிரப்பி வந்த “லங்கா ஸ்ரீ” குழுமத்தினர் (தமிழ்வின், ஜேவிபி, மனிதன்) இப்போது, ஒருவரின் இறப்பு விடயத்திலும், பொய்யான தகவலை வெளியிட்டு, தமது ஊடகங்களின் தரம்கெடட செயற்பாட்டை பகிரங்கப்படுத்தி உள்ளனர். (மேற்படி செய்தியை வெளியிட்டோரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகின்றது.)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 1 வயது குழந்தையை சுட்டு கொன்ற தந்தை..!!
Next post நீண்ட நேரம் கைப்பேசியில் உரையாடிய பெண்: கணவனின் கொடூர செயல்..!!