14 வயது சிறுமி கர்ப்பம்; சந்தேகநபரை தேடும் பொலிஸார்..!!

Read Time:1 Minute, 36 Second

933142653Rappபொகவத்தலாவ குயினா தோட்டப் பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் கா்ப்பம் தொடா்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரினால் தகவல் வழங்கியமைக்கு அமைய குயினா தோட்ட பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், குறித்த சிறுமியை அழைத்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் பெரியம்மாவின் மகன் என வாக்குமுலம் அளித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பில் சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதோடு, பாதிக்கபட்ட சிறுமியை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்க உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த சந்தேகநபர் பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டப் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளத்தில் நடந்து சென்வர்கள் திடீரென்று இறந்த பரிதாபம்…!! வீடியோ
Next post அஜித் சர்வதேச குற்றவாளியா..!!