மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த இளம்பெண் கொலை: வாலிபர் கைது…!!

Read Time:4 Minute, 53 Second

201607291518016051_young-woman-murder-case-youth-arrest-near-mettupalayam_SECVPFகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மோத்தேபாளையத்தை சேர்ந்தவர் பத்ரசாமி. கூலி தொழிலாளி.

இவருக்கு ஜெய்ஸ்ரீ (வயது 16) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜெய்ஸ்ரீ மில் வேலைக்கு சென்று வந்தார்.கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெய்ஸ்ரீ மாயமானார்.

இதுகுறித்து பத்ரசாமி கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அதேபகுதியில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ரவி சங்கர், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சருகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பெண்ணின் கையில் கருப்பு நிற பிளாஸ்டிக் வளையலும், கழுத்தில் கலர் பாசிமணியும் இருந்தன. அதனருகில் இருந்த மரத்தில் நீல நிற ஜாக்கெட் இருந்தது. எனவே இவரை யாரோ கொலை செய்து வாழைத் தோட்டத்திற்குள் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதி விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண், மாயமான ஜெய்ஸ்ரீ (வயது 16) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரது உறவினரான தினேஷ் (22) என்பவர் ஜெய்ஸ்ரீயை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் தினேசை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் வாழை மரங்களை ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். கடந்த 22-ந்தேதி மாலையில் வாழைத் தோட்டத்தில் அமர்ந்து செல்போனில் ‘செக்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஜெய்ஸ்ரீ நான் செல்போனில் ‘செக்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டார். அவர் என்னை இதனை உன் பெற்றோரிடம் கூறுவேன் என்றார்.

நான் ஜெய்ஸ்ரீயை கண்டித்ததோடு, அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். உடனே அவர் ‘நீங்கள் ஆபாச படம் பார்ப்பதே தவறு, அதோடு தங்கை முறையான என்னை உல்லாசத்துக்கு அழைப்பது அசிங்கமானது. உன் பெற்றோரிடம் கூறி என்ன செய்கிறேன் பார்’ என மிரட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் அவரை தாக்கினேன். இதில் ஜெயஸ்ரீ மயங்கி விழுந்தார். உயிர் பிழைத்தால் நான் மாட்டிக்கொள்வேன் என நினைத்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

பின்னர் தோட்டத்தில் உள்ள கல் கட்டிடத்திற்குள் உடலை கொண்டு சென்று நிர்வாணப்படுத்தினேன். சருகுகளால் உடலை மறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன். யாரும் பார்க்காததால் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஜெய்ஸ்ரீ உடல் பிரேத பரிசோ தனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புது வண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் கத்தியுடன் திரண்ட கல்லூரி மாணவர்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்…!!
Next post 15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படுகொலை…!!