15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படுகொலை…!!

Read Time:2 Minute, 0 Second

201607291628575684_Dalit-couple-murder-with-credit-Rs-15_SECVPFஉத்தரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் குர்ரா என்ற இடத்தை சேர்ந்தவர் பரத்சிங் (வயது 65). அவரது மனைவி மம்தா (60). இவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அதே ஊரைச்சேர்ந்த அசோக் மிஸ்ரா என்பவர் கடை நடத்தி வருகிறார். அவரிடம் 15 ரூபாய்க்கு பரத்சிங் பொருட்கள் கடனாக வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் வயலுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அசோக் மிஸ்ரா வழிமறித்து 15 ரூபாய் கடனை உடனே தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு அவர்கள் எங்களிடம் இப்போது காசு இல்லை. மாலையில் வீடு திரும்பியதற்கு பிறகு தருகிறோம் என்று கூறினார்கள்.

அதை அசோக்மிஸ்ரா ஏற்கவில்லை. இப்போதே பணம் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அசோக் மிஸ்ரா கோடாரியை எடுத்து கணவன்-மனைவி இருவரையும் வெட்டினார். அதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த இளம்பெண் கொலை: வாலிபர் கைது…!!
Next post உங்கள் தொப்பையை குறைக்க மூன்றே நாள் போதும்!.. நம்பமுடியவில்லையா இந்த உண்மையை?